யாழில் விபத்து : பெண்ணொருவர் பலி


யாழ், பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் எதிர்த் திசையில் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.

இதனையடுத்து தாயும் மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், எதிர்த்திசையில் இருந்து வந்த பவுசர் ஒன்று மோதுண்டதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *