யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின்பேரில் யாழ்தேவி ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ரயிலானது, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த வேளையில்பிற்பகல் 2.40 மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்தபோதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.
