யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்: இருவர் காயம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதலில் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 9 ஆம் திகதி மாலை, புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியின் பின்னர், முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது காயமடைந்த இரு மாணவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.