ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
சுன்னாகம் பகுதியில் 23ஆம் திகதி சனிக்கிழமை இரவு ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 2 கிராம் ஹெரோயினை தனது காரில் வைத்திருந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.