மருதங்கேணி மணல்காட்டில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
மருதங்கேணி, மணல்காடு கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இருந்த படகொன்றில் 75 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
