செம்மணியில் தொடரும் சோகம்
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (03) மேலும் 09 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 213 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 42 வது நாளாக இன்றும் யாழ்ப்பாணமாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.