கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் 11ஆம் திகதி வியாழக்கிழமை கஞ்சா கலந்த மாவாவுடன் 18 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 10 கிராம் 670 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.