யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது


யாழ்ப்பாணம், பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து மூன்று வாள்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த சந்தேக நபருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து இன்று (08) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *