செம்மணி மனித புதைகுழி: 118 மனித எச்சங்கள் மீட்பு


யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் உள்ள மனித புதைகுழிகளில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 26ஆவது நாளான இன்று (31), புதிதாக 3 மனித எச்சங்கள் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 3 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இதன்படி, இதுவரை மொத்தம் 118 மனித எச்சங்கள் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 105 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் யாழ்ப்பாண நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்படுகின்றன.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *