சீனாவின் “சகோதர பாசம்” திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு
சீனாவின் “சகோதர பாசம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் இன்று (10) வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் இந்த நிவாரண பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சி யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பிரதீபன் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள், பிரதேச செயலகர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மொத்தம் 1,070 குடும்பங்களுக்கு தலா 6,490 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
