நீதி கோரி யாழில் போராட்டம்

இந்த போராட்டமானது “இலங்கை அரசே எம்மிடம் இருந்த வலிந்து அபகரிக்கபட்டு படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோருக்கு நீதி கோருகின்றோம்“ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது பாதிக்கப்பட்ட தரப்பினர், பொதுமக்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காகவும் செம்மணி புதைகுழியை பாதுகாக்கும் முகமாகவும் அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
