இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல்
கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் திங்கட்கிழமை (17) நள்ளிரவு வீடொன்றில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கிலும் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காகவும் குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த தாக்குதலால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.