SLTB பேருந்தின் சாரதி மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்தின் சாரதி மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்தின் சாரதி, விசுவமடு பகுதியில் பயணிகளை இறக்குவதற்காக நிறுத்திய போது, இவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த சாரதி தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் பேருந்தில் பயணித்த மக்கள் நடுவீதியில் நீண்ட நேரம் நிர்க்கதிக்குள்ளான நிலையில், இதுதொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.