வேட்புமனுப் பத்திரங்களை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையளித்தது
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு உள்ளூராட்சி சபைக்குரிய வேட்புமனுப் பத்திரங்களை இன்று (20) இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையளித்தது.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான துரைராசா ரவிகரன் குறித்த வேட்புமனுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.
மேலும் நேற்று (19) கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுகள் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
