இந்தியாவின் 76வது குடியரசு தினம் யாழில் அனுஷ்டிப்பு


இந்தியாவின் 76வது குடியரசு தினம், வெகு விமர்சையாக ஞாயிற்றுக்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி, யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில், நிகழ்வுகள் காலை 9 மணிக்கு இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில் ஆரம்பமாகின. துணைத் தூதுவரால் இந்திய தேசிய கொடியும் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குடியரசு தின வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டு, இந்திய தேசபக்திப் பாடல்கள், நடனங்கள் மற்றும் கவிதைகள் ஆற்றப்பட்டன.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *