மாவை சேனாதிராஜாவிற்கு முல்லை நகரில் உணர்வுபூர்வ அஞ்சலி


மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு இன்று (31) முல்லைத்தீவு நகரின் பிரதான சுற்றுவட்டப்பாதையில் அஞ்சலி செலுத்தப்பட்டது

முல்லைத்தீவு பிரதேச ITAK தொண்டர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்து கொண்டார்.

அஞ்சலியை முன்னிட்டு, முல்லைத்தீவு பிரதான சுற்றுவட்டப்பாதை வளாகம் துக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் கறுப்பு மற்றும் வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டது. இதேபோல், அங்குவைக்கப்பட்ட மாவை சேனாதிராஜாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *