1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் கைது
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சுமார் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படவிருந்தது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரியின் தலைமையில் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
