400 வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது
வெளிநாட்டிலிருந்து வரியின்றி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 400 வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை (08) மதவாச்சி பொலிஸ் பிரிவின் மதவாச்சி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் வவுனியா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.