108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது


யாழ். குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் குருநகர், பூநகரி, மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *